சென்னை, நவ.21 தமிழ்நாடு மீனவர் களிடம் இருந்து பறி முதல் செய்யப்பட்ட படகுகளை, இலங்கை கடற்படை பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு உத்தர விட்டுள்ளது.
இலங்கை கடற்பகுதி யில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அண் மைக்காலங்களில் பறி முதல் செய்யப்பட்டு, துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ் நாடு மீனவர்களின் படகுகளை, இலங்கை கடற்படை பயன்படுத்திக் கொள்ளலாம் என அந் நாட்டு அரசு அறிவித் துள்ளது.
இதன் முதற்கட்டமாக மன்னாரில் இருந்து 5 படகுகள், யாழ்ப்பாணத் தில் இருந்து 8 படகுகள் என மொத்தம் 13 படகுகள் இலங்கை கடற் படையின் பயன்பாட்டிற்காக ஒப் படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் மன்னார், மயிலட்டி துறை முகங்களில் நிறுத்தப்பட்டுள்ள படகு களை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை அரசின் இந்த புதிய முடி வால் தமிழ்நாடு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.