பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசர கால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு!

viduthalai
1 Min Read

சென்னை, நவ.21– பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசர கால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு துறையின் சார்பில் அவசர கால வெள்ள மீட்புக் குழுக்கள் அமைக்கப்படுகிறது. இதன்படி, பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசர கால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. நீர்வளத்துறையின் 147 பொறியாளர்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த குழுவில் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக மண்டல கண்காணிப்பு பொறியாளர்கள் செயல்படுவார்கள் என்றும் இந்த குழுவினர் இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவில் இடம்பெற்றுள்ள பொறியாளர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்களின் அறிவுறுத்தல்படி இயற்கைக் பேரிடர் ஏற்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று அந்த பகுதியில் நீர்வளத்துறை அதிகாரியுடன் மீட்புப் பணிகளில் மேற்கொள்வார்கள் என்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதி விரைவில், இயல்பு நிலைக்குத் திரும்ப, தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் குழுவினர் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாசன கட்டமைப்பு மற்றும் குடிநீர் கட்டமைப்புகளை பாதிக்காத வகையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தப் பணிகளுக்காக சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் வெள்ள பாதிப்பு இடத்திற்கு செல்லும் நாட்கள் பணியில் உள்ள நாட்களாகவே கருதப்படும் என்றும் நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *