ஆந்திராவின் ரேணிகுண்டா பகுதியில் 700 ஆண்டுகள் பழைமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலின் கருவறைக்குள் அமர்ந்துகொண்டு பூசாரி ஒருவர் மது குடிக்கும் காட்சிப் பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஸநாதனத்தை காக்கும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.