அ.தி.மு.க. நெருக்கடியான காலகட்டத்தில் இருப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக (எவ்வளவோ) பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக அதிமுகவை தனிமைப்படுத்தும் வேலைகளை அக்கட்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுகவின் தேவை பாஜகவுக்கு உள்ளதாகவும், அதற்காக எந்த எல்லைக்கும் பாஜக செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.