‘வாருங்கள் படிப்போம்’ ‘வாருங்கள் படைப்போம்’ ‘ஹாய்… வாங்க கதை கேட்போம்’ ஆகிய தலைப்புகளில் தனித்தனி குழுக்கள் மூலம் அதன் நிறுவனர் முனைவர் கோ.ஒளிவண்ணன் தலைமையில் இதுவரை 600 நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கின்றனர். 2025 ஜனவரி 11ஆம் தேதி சென்னையில், இந்த மூன்று குழுக்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக ”முப்பெரும் விழா”வாகக் கொண்டாட உள்ளனர். இதற்காக முனைவர் கோ.ஒளிவண்ணன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். உடன் அபி சங்கரி, பத்மா அமர்நாத், இளங்கோ, சுனிதா ராஜா, அர்ஷா ஆகியோர் இருந்தனர். (பெரியார் திடல், 17.11.2024)
வாருங்கள் படிப்போம் முப்பெரும் விழா
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:கி.வீரமணி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books