இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து!

Viduthalai
1 Min Read

மணிப்பூரில் இரு சமூகங்களை பற்றி எரிய வைப்பது மோடி ஆட்சி! : சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு!

அரசியல்

மதுரை, ஜூலை 26 – இரு சமூகங்களை பற்றி எரிய வைப்பதுதான் மோ டி ஆட்சி. மணிப்பூர் சம்ப வத்தால் இந்திய இறை யாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சீதா ராம் யெச்சூரி தெரிவித்து உள்ளார். மதுரை, முனிச் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் மாநில உரிமை பாது காப்பு மாநாடு 23ஆம் தேதி நடந்த து. 

மாநாட்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலா ளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:-

இந்திய கூட்டாட்சி மிகப்பெரிய தாக்குதலில் சிக்கியுள்ளது என்பதை மணிப்பூர் சம்பவம் காட்டுகிறது. நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை, எல்லோருக்கும் சம உரிமை என்பதே கூட் டாட்சியாக உள்ளது. ஆனால், இரட்டை இன் ஜினாக உள்ள மோடி ஆட்சி இரு சமூகங்களை நேருக்கு நேர் நிறுத்தி பற்றி எரியச்செய்யும் வகை யில் செயல்படுகிறது. இந்தியாவின் இறை யாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் பழங்குடி மக்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பெண்களும் தாக்குதலுக்கு உள்ளா காத நாட்களே இல்லை. ஒரே நாடு, ஒரே ஆட்சி, ஒரே வரி, ஒரே மொழி, ஒரே அரசு, ஒரே தலைவர் என்பதை நம் மீது திணிக்க முயற்சிக்கின்ற னர். மாநிலங்கள் இல்லா மல் இந்தியா கிடையாது. ஆனால் அந்த உணர் வின்றி மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ஆளுநர்கள் என்ற பெய ரில் பா.ஜ.க. வின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகின் றனர். தற்போது ஒன்றிய அரசு பொதுப்பட்டி யலை கடந்து, மாநில பட் டியலில் உள்ள துறை களை கைப்பற்ற தன்னிச்சை நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. மாநி லங்கள் மீது அப்பட்ட மான நிதி அதிகார மீறல் களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. 

-இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *