காவல் ஆணையர் நடவடிக்கை
சென்னை, நவ.17 சென்னையில் மருத்து வர் கத்தியால் குத்தப்பட்டதன் எதி ரொலியாக, பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 8 அரசு மருத்துவமனைகளில் உடனடியாக புறக்காவல் நிலையங்களை அமைத்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலை ஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் பாலாஜி 13.11.2024 அன்று விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்த நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்பட மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் காவல் துறையினரின் பாதுகாப்பு அதிக ரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை, தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நலம் மற்றும் பொது நல மருத்துவ மனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை (கேஎம்சி), அயனாவரம் அரசு மனநல காப்பகம் (அய்எம்எச்) ஆகிய 8 அரசு மருத்துவமனைகளில் முழு அளவில் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு விழா பல்நோக்கு மருத்து வமனை, ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை என இந்த 3 மருத்துவமனைகளிலும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 1 உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பணியமர்த்தப்பட்டு வரு கின்றனர்.
இந்நிலையில், தற்போது எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, காந்திநகர் அரசு மருத்துவமனை, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை, கலைஞர் கருணா நிதி நகர் அரசு மருத்துவமனை, கலை ஞர் கருணாநிதி நகர் இ.எஸ்.அய். மருத்துவமனை, அமைந்தகரை அரசு மகப்பேறு மருத்துவமனை, பெரியார் நகர் அரசு மருத்துவமனை என இந்த 8 மருத்துவமனைகளில் 14.11.2024 அன்றுமுதல் புறக்காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு சுழற்சி முறையில் 2 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மருத்துவ சேவை பாதிப்பு
இதனிடையே, மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் கடந்த 14 ஆம் தேதியன்று ஈடுபட்டனர். இத னால், தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளி களுக்கான மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
இதனிடையே, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்ெகனவே பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இரவு பணியில் இருக்கும் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரோந்து மற்றும் கண்காணிப்பில் கூடுதல் காவல்துறையினர் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வுகள் கவனத்துக்கு வந்தால் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மருத்து வமனையின் முதல்வர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.