அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம்

1 Min Read

அரசியல்


 
எதிர்க்கட்சிக்காரர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடுவதா? 

புதுடில்லி, ஜூலை 27 மணிப்பூர் விவகாரம் குறித்த   காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவ ருமான மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங் கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் கடிதம் எழுதினார். அதில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக உள்ளது. கட்சி வேறுபாடு தாண்டி அனைவரும் அதற்கு ஒத் துழைக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். 

அதைத் தொடர்ந்து அமித்ஷாவுக்கு மல்லி கார்ஜுன கார்கே எழுதியுள்ள பதில் கடிதத்தில் கூறி யுள்ளதாவது:- ஒரே நாளில், பிரதமர் எதிர்க்கட்சிகளை ஆங்கிலேய ஆட்சியாளர்களுடனும், பயங்கரவாதிகளுடனும் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். உள்துறை அமைச்சராகிய நீங்கள் எதிர்க்கட்சியினருக்கு உணர்வுப்பூர்வமான கடிதம் எழுதி, ஆக்கபூர்வமான பதிலை எதிர்பார்க்கிறீர்கள். ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே போதுமான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்து வருகிறது. தற்போது அந்த இடைவெளி, ஆளுங்கட்சிக்கு உள்ளேயே தோன்றத் தொடங்கி யுள்ளது. எதிர்க்கட்சிகள் திக்கற்றுச் செயல்படுகின்றன என்று பிரதமர் கூறியிருப்பது அபத்தமானது மட்டுமல்ல, தவிர்க்கப்பட வேண்டியதும்கூட 

நீங்கள் உங்கள் கடிதத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள் தொடர்பான வார்த்தைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. நாங்கள் வலியுறுத்துகிறபடி நாடாளுமன்றத்துக்கு வந்து மணிப்பூர் விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதை பிரதமர் மோடி தனது கவுரவத்துக்கு இழுக்காக கருதுகிறார். கடிதத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவது எளிது. ஆனால் உங்களின் நடத்தையின் மூலம் மட்டுமே அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். அவை அலுவல்கள் சீராக நடைபெற அரசு விரும்பினால், எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துகளை எழுப்ப வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *