பி.ஜே.பி கூட்டணியில் வலுவான கட்சிகள் ஈடி, அய்டி, சிபிஅய் மட்டுமே உத்தவ் தாக்கரே கருத்து

1 Min Read

மும்பை, ஜூலை 27 தேசிய ஜனநாயக கூட்ட ணியில் உள்ள 3 வலுவான கட்சிகள் ஈ.டி., அய்.டி., மற்றும் சி.பி.அய். மட்டுமே என மேனாள் முதல் – அமைச்சர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்தார்.

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியை சேர்ந்த மகாராட்டிரா மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக் கரேயிடம் அந்த கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரி கையான ‘சாம்னா’வின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் பேட்டி கண்டார். அந்த சிறப்பு பேட்டியின் ஒரு பகுதி நேற்று  (26.7.2023) ‘சாம்னா’வில் வெளி யானது. அதில் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-

தேர்தல் வரும்போது மட்டுமே கூட்டணி கட்சிகளை பா.ஜனதா அணுகும். அந்த தருணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்று சொல்வார்கள். தேர்தல் முடிந்த பிறகு அது மோடி அரசாக மாறி விடும். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 36 கட்சிகள் உள்ளன. ஆனால் அந்த கூட்டணியில் மூன்று தான் வலுவான கட்சிகள். அவை ஈ.டி. (அமலாக்கத்துறை), சி.பி.அய். மற்றும் அய்.டி. (வருமான வரித்துறை). மற்ற கட்சிகள் எங்கே இருக்கின்றன என்று தெரியவில்லை. அந்த கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர்கூட கிடையாது. இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

 எது உண்மையான சிவசேனா என்ற கேள்விக்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, “தாக்கரே குடும்பம் எங்கு இருக்கிறதோ, அது தான் உண்மையான சிவசேனா” என்று குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், “எதிர்ப்பு அணியினரால் எங்களுக்கு மாற்று வாய்ப்பு கிடைத்துள்ளது. பல ஆண்டுகளாக அவர்கள் ஆக்கிரமித்து இருந்த இருக்கைகளில் புதியவர்கள் அமர வாய்ப்பு கிடைத் துள்ளது” என்று குறிப்பிட்டார். “ஊழல் விவகாரத்தில் சட்டம் அனைவருக்கும் ஒன்று தான். பா.ஜனதாவில் உள்ள ஊழல்வாதிகளும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *