பாலாறு : பொருந்தலாறு – குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறப்பு

viduthalai
1 Min Read

திண்டுக்கல், நவ.15 பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து மாநில அரசு சார்பில் நேற்று (14.11.2024) வெளியிடப்பட்ட உத்தரவு:

திண்டுக்கல் மாவட்டம், குதிரையாறு அணையின் இடது பிரதானக் கால்வாய் மற்றும் பழைய பாசனப் பரப்பு, பழனி வட்டம் தாடாகுளம் பாசனப் பரப்பு ஆகியவற்றுக்கு நீா் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பொருந்தலாறு மற்றும் குதிரையாறு அணைகளில் இருந்து இன்று (15.11.2024) முதல் அடுத்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி வரை நீா் திறந்து விடப்படும்.இதன்மூலம், திண்டுக்கல், திருப்பூா் மாவட்டங்களிலுள்ள பழனி, மடத்துக்குளம் வட்ட பாசன நிலங்களும், புதச்சு மற்றும் பாலசமுத்திரம் கிராமங்களிலுள்ள பாசன நிலங்களும் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *