சென்னை, நவ.14 கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம் என சி.பி.அய். மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், விரைவில் அது சாத்தியப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஆளுங்கட்சி மேல் தொழிற்சங்கங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதிருப்தி இருக்க வேண்டும் என சிலர் விரும்புவதாகவும் குற்றஞ்சாட்டினார்.