செய்திச் சுருக்கம்

1 Min Read

 ஆழ்துளை

தமிழ்நாடு முழுவதும் செயல்படாத ஆழ்துளை கிணறுகள், குவாரி குழிகளை உடனே கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு.

 அஞ்சல் சேவை

சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தில் உள்ள தியாகராயர் நகர், மயிலாப்பூர், சூளைமேடு, கிரீம்ஸ் சாலை, கோபாலபுரம், தேனாம்பேட்டை, தியாகராயர்  நகர் வடக்கு, திருவல்லிக்கேணி ஆகிய 8 அலுவலகங்களில் பார்சல் பேக்கே ஜிங் யூனிட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை மத்திய அஞ்சல் கோட்ட கணகாணிப்பாளர் திவ்யா சந்திரன் தகவல்.

விடுவிப்பு

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை தமிழ்நாடு மீன் வளத்துறை அதிகாரிகள் வரவேற்று வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *