ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதே ஒன்றிய அரசின் ஒற்றைக் குறிக்கோள்!

Viduthalai
1 Min Read

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தாக்கு

மும்பை, நவ.11 ஊழல்வாதிகளை பாதுகாப்பதே மோடி அரசின் ஒற்றைக் குறிக்கோள் என்றார் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகா ராட்டிரா மேனாள் முதலமைச்சருமான சரத் பவார்.
288 தொகுதிகளை கொண்ட மகாராட்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அவுரங்காபாத் மாவட்டம் ஜிந்தூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராட்டிரா மேனாள் முதலமைச்சருமான சரத் பவார் பேசுகையில்,
“மோடி அரசு தனது விவசாயிகளுக்கு எதி ரான கொள்கைமூலம் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளது. இந்த முடிவு மகாராட்டிரா விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகளைப் பாதுகாக்க மற்றும் மோடி அரசின் தவறான கொள்கையை எதிர்க்கவேண்டும் என்றால், நாம் அதிகாரத்தில் உள்ளவர்களை (பாஜக கூட்டணி) முதலில் தோற்கடிக்க வேண்டும் மகாராட்டிராவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. இதற்கு பத்லாபூர் பாலியல் வன்கொடுமை (2 பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை) உதாரணம் ஆகும்.
அதே போல மாநிலத்தில் பெண்கள் காணாமல் போகும் நிகழ்வுகளும் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது.
பாஜக தலைமையிலான மோடி அரசு ஊழல்வா திகளைப் பாதுகாப்பதும், அதிகாரத்திற்காக ஊழல்வாதிகளுடன் கைகோர்ப்பது என்ற ஒற்றைக் குறிக்கோள்களுடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
அண்மையில் அஜித் பவார் அணியில் இருக்கும் சாகன் புஜ்பாலிடம் ஆளும் கூட்டணியில் ஏன் இணைந்தீர்கள் என்று கேட்டேன். அதற்குச் சிறைக்கு செல்ல நான் விரும்பவில்லை. அதனால்தான் இணைந்தேன். புஜ்பால் எதிர்க்கட்சிகளாக செயல்பட அனுமதிக்கவில்லை எனக் கூறுகிறார். இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது” என அவர் குற்றம்சாட்டினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *