மரத்திலான செயற்கைக்கோள்

1 Min Read

மரப்பலகையால் ஆன உலகின் முதல் செயற்கைக் கோளை ஜப்பானின் கியுட்டோ பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உள்ளங்கை அளவிலான இந்த சிறிய செயற்கைக்கோளின் பெயர் ‘லிக்னோசாட்’. இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்வெளியில் உள்ள பன்னாட்டு விண்வெளி மய்யத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. உலோக செயற்கைக்கோள் பயன்பாட்டு காலம் முடிந்து விண்வெளி குப்பையாக பூமியில் விழும் போது ஏற்படும் ஆபத்தை இதன் மூலம் தடுக்க முடியும்.

மீன்கள் சுவாசிப்பது எப்படி?

நம்மால் நீருக்குள் சுவாசிக்க முடியாது. ஆனால் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் இதற்கான சிறப்பை பெற்றுள்ளன. மீன்களின் உடல் அமைப்பில் நீருக்குள் இருக்கும் ஆக்சிஜனைப் பிரித்து எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றும் செவுள்கள் (கில்ஸ்) என்ற பாகம் உள்ளன. இதன் மூலமே அதன் சுவாசம் நடைபெறுகிறது. கடல் மீன்களின் வாய் வழியாக உள்ளே செல்லும் நீர், செவுள்களில் இருக்கும் நுண்ணிய துகள் வழியாக ஆக்சிஜனை உறிஞ்சி ரத்தத்தில் சேர்க்கிறது. நன்னீர் மீன்கள், செவுள்கள் வழியாகவே நீரை உள்வாங்கிச் சுவாசிக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *