பல்லாயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்மரம் கண்டுபிடிப்பு

viduthalai
1 Min Read

புதுகோட்டை மாவட்டம், அரிமளம் அருகே மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜீவிதா தலைமையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொன்னாம்பட்டி கிராம காட்டுப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் கண்டுபிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை தொல்லியல், வரலாற்று ஆய்வு நடுவம் அமைப்பின் தலைவர் பாண்டியன் கூறியதாவது:
பூமியின் பெரும் பகுதியில் எண்ணற்ற உயிரி னங்களும், தாவரங்களும் புதையுண்டு பல கோடி ஆண்டுகளாக பூமிக்கடியில் சிக்கியுள்ளன. சுண்ணாம்பு பாறைகளின் இடையில் சிக்கியதன் காரணமாகவும், காரத்தன்மை காரணமாகவும், மட்காமல் அதே நிலையில் இருந்துள்ளன.

இதன் காரணமாக கரிம பொருளாக மட்கும் நிலையில் உள்ள மரம், கடல்வாழ் உயிரிகள், கனிம பொருளால் ஆன படிமங்களாக மாறிவிட்டன. இந்த நிகழ்வு ஏற்பட இவை நீண்ட நெடிய காலங்களை எடுத்துக் கொள்கின்றன. புதுக்கோட்டையில் நரிமேடு பகுதியில் ஏற்கெனவே இரண்டு கல்மர துண்டுகள் கிடைத்துள்ளன. இவை மிக நீண்டதாக இருந்து தற்போது உடைந்து பல பாகங்களாக காணப்படுகின்றன.

இந்த இடத்தை இந்திய புவியியல் ஆய்வுத்துறை ஆய்வு செய்ய வேண்டும். வேறொரு இடத்தில் மாற்றி காட்சிப்படுத்தாமல், அதே இடத்தில் அருங்காட்சியகமாக அல்லது புவியியல் பார்வையிடமாக மாற்ற தமிழ்நாடு அரசும், தொல்லியல் துறையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *