நெல்லை, நவ.7- நெல்லை மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39), பாத்திர வியாபாரி. இவரது மகள் முத்துலட்சுமி (18). இவர் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துள்ளார். கடந்த ஓராண்டாக அவர் நெல்லையில் உள்ள தனியார் பயிற்சி மய்ய விடுதியில் தங்கியிருந்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். விடுதியில் தங்கி இருந்ததால் செலவு அதிகமானதாக கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டன், முத்துலட்சுமியிடம் வீட்டில் இருந்து பயிற்சிக்கு செல்லுமாறு கூறினார். அதன்படி அவரும் வீட்டில் இருந்தபடி தினமும் அதிகாலை 6.30 மணிக்கு புறப்பட்டு பயிற்சிக்கு சென்று வந்தார். ஆனாலும் பயிற்சிக்கு செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் மீண்டும் விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்று முத்துலட்சுமி தனது தந்தையிடம் தெரிவித்தார். ஆனால் அதற்கு மணிகண்டன் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த முத்துலட்சுமி நேற்று (6.11.2024) காலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், முத்துலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி களக்காடு காவல்துறையினர் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘நீட்’ தேர்வு பயிற்சிக்கு சென்று வந்த மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து காண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பி.எட். சிறப்பு கல்வி படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, நவ.7 பி.எட். சிறப்பு கல்வி படிப்புக்கு இணைய வழியில் விண்ணப் பிக்கலாம் என தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.
இது தொடா்பாக அப்பல்கலைக் கழகத்தின் பதிவாளா் செந்தில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக பி.எட். (சிறப்பு கல்வி) படிப்பை வழங்கி வருகிறது. ஒன்றிய அரசின் மறுவாழ்வு கவுன்சில் அனுமதியுடன் நடத்தப்படும் இப்படிப்பு, பி.எட். (பொது) படிப்புக்கு இணையானது என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இப்படிப்புக்கு நுழைவுத்தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. 2025-ஆம் ஆண்டு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு டிச. 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு டிச. 1-ஆம் தேதிக்குள் இணையவழியில் (www.tnou.ac.in) விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தோ்வு முடிவு மற்றும் கட் ஆப் மதிப்பெண் டிச. 23-ஆம் தேதி வெளியிடப்படும். மாணவா் சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் தேங்கிய பகுதிகளில்
நோய் தடுப்பு நடவடிக்கைகள்
சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவு
சென்னை, நவ.7 சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழையால் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, டைபாய்டு பாதிப்புகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, மாசுபட்ட குடிநீா் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழை நீா் கழிவு நீராக மாறக் கூடிய சூழல் எழுந்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் இத்தகைய நிலை நீடிக்கிறது. இதனால், நோய்க் கிருமிகள் பரவக் கூடிய வாய்ப்புகள் எழுந்துள்ளன. இதைத் தொடா்ந்து நோய்ப் பரவலைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மழை வெள்ள காலங்களின்போது காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை எலிக் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் பரவ அதிக வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக மருத்துவக் குழுக்கள் மூலமாக நோய் எதிா்ப்பு மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் கிருமித் தொற்று தடுப்பூசியும் (டிடி) செலுத்தப்படவுள்ளது. அசித்ரோமைசின், டாக்சிசிலின் போன்ற மருந்துகள் வயதுகேற்ப பொதுமக்களுக்கும், சுகாதாரப் பணியாளா்களுக்கும் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று குடிநீா் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்யவும், போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் பொது மக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருகுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.