பீகாரில் பாலம் இடிந்த நிகழ்வுகள்: உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்

viduthalai
1 Min Read

புதுடில்லி, நவ. 5- பீகாரில் தொடா்ந்து பல பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், பாலங்களின் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் நேற்று (4.11.2024) ஒப்புக்கொண்டது.

பீகாரின் சிவான், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பாரண், கிசன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் நடப்பாண்டு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் கட்டுமானத்தில் இருந்த புதிய பாலங்களும் அடங்கும். மாநிலத்தில் உள்ள அனைத்து பழைய பாலங்களையும் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க வேண்டிய பாலங்களை அடையாளம் காணுமாறு சாலை கட்டுமானம் மற்றும் ஊரகப் பணிகள் துறைகளுக்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். பலத்த மழையே இந்த நிகழ்வுகளுக்குக் காரணம் என்று மாநில அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ள பாலங்களின் பாதுகாப்பு மற்றும் ஆயுள் குறித்த பொதுநல வழக்கை வழக்குரைஞா் பிரஜேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ‘இந்தியாவில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக பீகார் உள்ளது. மாநிலத்தின் பரப்பளவில் 73.06 சதவீதம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. பாலங்கள் தொடா்ந்து இடிந்து விழுவதால் பேரழிவு ஏற்படுவதுடன் மக்களின் உயிருக்கும் அது ஆபத்தை ஏற்படுத்துகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *