ஹிந்துத்துவா வாதத்தைக் கையில் எடுக்கும் டிரம்ப்!

Viduthalai
2 Min Read

அமெரிக்க அதிபர் தோ்தல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் மேனாள் அதிபர் டிரம்ப்புக்கும், இன்றைய துணை அதிபரான ஜனநாயகக் கட்சி வேட்பாளா் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி மிகக் கடுமையாக இருக்கும்; இருவரில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தீபாவளியையொட்டி அமெரிக்க மேனாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “அமெரிக்க அதிபர், துணை அதிபருக்கு ஹிந்துக்கள் மீது அக்கறையில்லை” என்று விமர்சித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “வங்கதேசத்தில் ஹிந் துக்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கடுமையாக கண்டிப்பதாகவும், இந்த மக்கள் அங்குள்ள உள்ளூர் கும்பல்களால் தாக்கப்படுவதாகவும், என் மேற்பார்வையில் இருந்தால் இப்படி நடந்திருக்க விட்டிருக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களை கமலாவும், பைடனும் புறக்கணித்துள்ளனர். இஸ்ரேல் தொடங்கி உக்ரைன் வரை பல்வேறு முக்கிய விவகாரங்களில் அவர்கள் இருவரும் பேரிடராக அமைந்துவிட்டனர். ஆனால், நாம் அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவோம். வலிமை மூலம் அமைதியை திரும்பக் கொண்டு வருவோம்.”

”இடதுசாரிகளின் மத எதிர்ப்பு செயல்பாடு களிலிருந்து அமெரிக்க ஹிந்துக்களை பாதுகாப் போம். உங்கள் விடுதலைக்காக நாங்கள் போராடு வோம். எனது நிர்வாகத்தின்கீழ், இந்தியாவுடனான நமது அளப்பரிய பங்களிப்பையும், எனது நல்ல நண்பர் பிரதமர் மோடியுடனான உறவையும் வலுப்படுத்துவோம். உங்கள் சிறு வணிகத்தை யெல்லாம் அதிக வரி விதிப்பு நடவடிக்கைகளால் கமலா ஹாரிஸ் அழித்துவிடுவார். ஆனால், எனது நிர்வாகத்தின்கீழ், வரி ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும், அதன்மூலம், வரலாற்றில் மிகச் சிறந்த பொருளாதாரமாக அமெரிக்கா கட்டமைக்கப் படும். மீண்டும் அமெரிக்காவை சிறப்பான தேசமாக்குவோம்.”
மேலும், அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள். தீபத் திருவிழாவானது தீய சக்திகளுக்கு எதிராக நல்ல சக்திகள் வெற்றி பெற வழிவகுக்கும் என தான் நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார் டிரம்ப்.

– தினமணி இணையம், 1.11.2024

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்தது போல, இந்தியாவைக் கெடுத்தது போதாது என்று ஹிந்துத்துவா அமெரிக்கா வரை தன் விஷக் காற்றை பரப்புகிறது என்பதற்கு இந்த ஆதாரம் ஒன்று போதாதா?
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராகக் கொடூரங்கள் எப்படி எப்படி எல்லாம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன. அப்பொழுதெல்லாம் வாய் திறக்காத டிரம்ப் இப்பொழுது ஹிந்து மதவாதத்தைக் கையில் எடுப்பதன் பின்னணி என்ன?
அமெரிக்காவில் பெரும் பதவிகளில் பார்ப் பனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ‘ஹரே கிருஷ்ணா!’ வகையறாக்களின் வாலாட்டமும் அங்குண்டு.
அமெரிக்கா – ஹவாய்ப் பகுதியைச் சேர்ந்த துளசி கபார்டு என்பவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபையில் பகவத் கீதையைப் படித்து (2013 ஜனவரி 15) எம்.பி.யாகப் பதவியேற்றதுண்டு.
அமெரிக்காவில் இயங்கும் இஸ்கான் அமைப்பின் தாக்கம் இது. இப்பொழுது குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டிரம்பும். இதனைக் கையி்ல எடுக்கிறார். இந்த வகையில் இந்தியப் பிரதமர் மோடியையும் புகழ்கிறார். பரிதாபம் – பகவத் கீதையில் சொல்லப்பட்டு இருப்பது என்ன என்பதை அறியாதவர்கள் போலும்! பார்ப்பனீயம் எங்கிருந்தாலும் தன் சித்து வேலையைக் காட்டத் தானே செய்யும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *