கைதிகள் – வழக்குரைஞர்கள் சந்திப்பு விவகாரம் ஆய்வு செய்ய குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

1 Min Read

சென்னை, அக். 31- சிறைக் கைதிகளை சந்திக்கச் செல்லும் வழக்குரைஞா்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய பார் கவுன்சில் மற்றும் வழக்குரைஞா்கள் சங்கங்கள் பிரதிநிதிகளை நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைக் கைதிகளைச் சந்திக்க, வழக்குரைஞா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமா்வில் மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறைத் துறை டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கைதிகளைச் சந்திக்கும் வழக்குரைஞா்களின் வசதிக்காக புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் மூலம் வழக்குரைஞா்கள் கைதிகளைச் சந்திக்கும் நடைமுறை எளிமையாக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புழல் சிறையில் செய்யப்பட்டுள்ள இந்த வசதியை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த வசதிகள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்கவும், மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து தேவையான பரிந்துரைகளை மேற்கொள்ளவும் வழக்குரைஞா்கள் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சார்பில் ஆஜரான அதன் தலைவா் ஜி.மோகன கிருஷ்ணன், சிறையில் கைதிகளைச் சந்திக்க இருவருக்கும் இடையே அமைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூண்டு இன்னும் அகற்றப்படவில்லை எனக் கூறினார்.

இதையடுத்து சிறையில் ஆய்வு செய்து பரந்துரைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பார் கவுன்சில், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம், லா அசோஷியேஷன், பெண் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் மெட்ராஸ் பார் அசோசியேஷன் பிரதிநிதிகளை கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவ. 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *