(புதுச்சேரி) ஜிப்மரில் செவிலியர் படிப்பு – துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

1 Min Read

புதுச்சேரி ஜிப்மரில் செவிலியா் (பிஎஸ்சி) மற்றும் அலைடு ஹெல்த் சையின்ஸ் படிப்புகளுக்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக் கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜிப்மர் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஜிப்மரில் செவிலியர் (பிஎஸ்சி) படிப்புக்கு மகளிர் 85, ஆடவா் 9 என மொத்தம் 94 இடங்கள் சோ்க்கப்படவுள்ளன. மேலும், அலைடு ஹெல்த் சையின்ஸ் பாடப்பிரிவுகளில் 87 இடங்களுக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெறவுள்ளது.

எனவே, ஜிப்மரில் செவிலியா் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தோ்வு அடிப்படையில் நடைபெறும் மாணவா் சோ்க்கைக்கு ஜிப்மா் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அக். 24-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் அடிப்படையில் வரும் நவம்பா் 8-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக மாணவா் சோ்க்கைப் பட்டியல் ஜிப்மா் இணையத்தில் வெளியிடப்படும். மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்குப் பிறகு நவம்பா் 25-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *