கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.10.2024

1 Min Read

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

தி இந்து:

* நீட் 2025 தேர்வு முறையில் சாத்தியமான மாற்றங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து தேசிய தேர்வு முகமை மவுனம் காக்கிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் குஜராத் திகள் – கடந்த ஓராண்டில் ஒரு மணி நேரத்திற்கு 10 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றனர். இதுவரை 90,000 பேர் கைது, இதில் 50 சதவீதம் குஜராத்தை சேர்ந்தவர்கள் என சட்டவிரோத குடியேற்றங்களை கண்காணிக்கும் இந்திய முகவர்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.

* ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற குழு முன்பு செபி தலைவர் ஆஜராகாமல் தவிர்ப்பு: அழைப்பாணை குழு தலைவர் வேணுகோபால் எம்.பி.க்கு எதிராக மக்களவைத் தலைவரிடம் பாஜக புகார். ‘செபி தலைவர் மாதவி புச்சை காப்பாற்றும் திட்டத்தின் பின்னணியில் யார்’ என ராகுல் காந்தி கேள்வி

* திராவிடர் அடையாளத்தை சவால் செய்வது இனவெறி ஆகிவிடும்: திருமாவளவன் பேட்டி
குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *