நீரிழிவு நோய் – பாத புண் சிகிச்சை பயிற்சிப் பள்ளி தொடக்கம்

viduthalai
1 Min Read

சென்னை, அக்.24- நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாத பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச் சைகளை வழங்குவதற்கான மருத்துவப் பயிற்சிப் பள்ளியை சென்னை, எம்.வி. நீரிழிவு நோய் ஆராய்ச்சி மய்யம் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் புண் சீரமைப்புக்கான மருத்துவ அகாதெமி (ஏபிடபிள்யூஹெச்) அமைப்புடன் இணைந்து நாட்டிலேயே முதன்முறையாக இத்தகைய பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவா்கள் மற்றும் துணை மருத்துவ உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முன்னதாக, இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் 22.10.2024 அன்று நடைபெற்றது.

இதுதொடா்பாக எம்.வி.நீரிழிவு நோய் மய்யத்தின் தலைவரும், நீரிழிவு நோய் மருத்துவ நிபுணருமான விஜய் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நீரிழிவு நோயின் தலைநகராக உலக அளவில் இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் மட்டும் 10.14 கோடி போ் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் பலர் பாதங்களை முறையாக பராமரிக்காமல் நீரிழிவு நோய் சாா்ந்த தொற்றுப் பாதிப்புக்குள்ளாகி, கால்களை அகற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

எம்.வி.நீரிழிவு நோய் மய்யம், பிற அமைப்புக ளுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் நான்கில் ஒரு நீரிழிவு நோயாளிக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படும் அச்சுறுத்தல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுமட்டுமன்றி சிறுநீரக பாதிப்புக்கான வாய்ப்பும் 70 சதவீதம் பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. பாதங்களை பாதுகாப்பதற் கான பிரத்யேக காலணிகள், உபகரணங்கள் வெளிநாட்டு சந்தைகளில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், அதைக் காட்டிலும் குறைந்த விலையில் உள்நாட்டிலேயே உள்ள காலணிகள் மிகுந்த பலனளிப்பவையாக உள்ளதும் ஆய்வில் தெரியவந்தது. எனவேதான், நீரிழிவு நோயாளிகளுக்கான பாத பராமரிப்பை மேம்பட்ட முறையில் மேற்கொள்வதற்கானப் பயிற்சிகளை வழங்க பிரத்யேகப் பள்ளியை தொடங்கியுள்ளோம். பள்ளியின் முதல் பயிற்சி வகுப்புகள் வரும் அக்.25-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன என்றார் அவர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *