Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை விருது ஆசிரியர் வேண்டுகோளை ஏற்று ”திராவிட இதழியல் பயிற்சிக் கல்லூரி”
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை விருது ஆசிரியர் வேண்டுகோளை ஏற்று ”திராவிட இதழியல் பயிற்சிக் கல்லூரி”

Last updated: October 22, 2024 5:55 pm
Published: October 22, 2024
தமிழ்நாடு
SHARE

படத்திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, அக். 22- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21-10-2024) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முரசொலி செல்வம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு.

இன்று – மறைந்த நம்முடைய மதிப்பிற்குரிய முரசொலி செல்வம் அவர்களுடைய உருவப் படத்தினைத் திறந்து வைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஒலிவாங்கிக்கு முன்னால் நின்று பேசலாமா அல்லது தவிர்த்துவிடலாமா என்கிற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு மனக்குழப்பத்திலே நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.

முரசொலி செல்வம் அவர்கள் மறைந்துவிட்டார் என்பதை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை; ஏன் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பேசுவதால் அவர் திரும்பி வந்துவிடப் போகிறாரா? என்ற அந்த ஏக்கமும் என்னுடைய நெஞ்சத்தை, என்னுடைய தொண்டையை அடைத்துக் கொண்டிருக்கிறது.

Also read

தமிழ்நாடு
கடும் எதிர்ப்பால் பணிந்தது ரிசர்வ் வங்கி நகை கடன் வழங்குவதில் புதிய விதிகள்
சக்தி யாருக்கு? சாமிக்கா, மின்சாரத்துக்கா?

இங்கு நம்முடைய ஆசிரியர் அவர்கள் வைத்த வேண்டுகோளான, முரசொலி செல்வம் அவர்களின் பெயரில் ’திராவிட இதழியல் பயிற்சிக் களம் ஒன்றை கல்லூரியாக உருவாக்க வேண்டும்’ என்ற அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் குறிப்பட்டார்

கடந்த 10-ஆம் தேதி அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியைத் தம்பி தயாநிதி அவர்கள்தான் முதன்முதலில் எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காலை 10 மணியளவில் என்னிடத்தில் சொன்னார். அதிர்ந்துவிட்டேன். நம்ப முடியவில்லை. அவருக்கு எந்த உடல்நலக் குறைவும் கிடையாது. ஏதேனும் உடல் கோளாறு ஏற்பட்டு அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாரா என்றால் இல்லை. எனவே, அப்படிப்பட்டவர் மறைந்துவிட்டார் என்று சொல்கிறபோது என்னால் மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்தைச் சார்ந்திருக்கக்கூடிய அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில்தான் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டார்

அவர் மறைவதற்கு முதல் நாள் மாலை என்னுடைய தங்கை செல்வியிடத்தில் பேசியிருக்கிறார். கலாநிதி மாறனிடத்தில் பேசியிருக்கிறார். அவருடைய மகள் எழிலரசியிடம் பேசியிருக்கிறார். என்னுடைய தம்பி தமிழரசு உடன் பேசியிருக்கிறார். ஏன் என்னிடத்திலும் பேசினார். “நாளை நான் சென்னைக்கு புறப்பட்டு வருகிறேன்” என்று சொன்னார்; வந்தார். உயிருடன் வரவில்லை. உடல் மட்டும்தான் வந்தது. நம்மையெல்லாம் ஒரு சோகச் சூழ்நிலையில் அவர் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டார்.

தலைவர் கலைஞருடைய அக்கா மகன் – அதனால்தான் இங்கே எல்லோரும் சொன்னார்கள் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் நினைவைப் போற்றக்கூடிய வகையில் அவருக்குச் செல்வம் என்று தலைவர் கலைஞர் அவர்கள்தான் பெயர் சூட்டினார். மார்ச் மாதம் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்தார்கள். ஏப்ரல் மாதம் நம்முடைய முரசொலி செல்வம் அவர்கள் பிறந்தார். அவரது நினைவாக அவருடைய பெயர் சூட்டப்பட்டது. எப்படி அவருக்கு அவருடைய நினைவாகப் பெயர் சூட்டப்பட்டதோ, அதேபோல் எனக்குத் தங்கை பிறந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் செல்வி என்று பெயர் சூட்டி அப்போதே திருமணத்திற்கான முடிவை எடுத்துவிட்டார்கள்.
மூத்த அண்ணனாக இருந்தவர்

தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தவரையில் செல்வம் அவர்களுக்கு இரண்டாம் தாயாக, செல்வத்தை வளர்த்தவராக இருந்தார். கலைஞருடைய வார்ப்பாக செல்வம் அவர்கள் விளங்கினார்கள். நாங்களெல்லாம் அவரை மாமா, அத்தான் என்ற உறவுமுறைகளை அழைப்பதாக இருந்தாலும், அத்தனைபேரும் ’குட்டி அத்தான், குட்டி அத்தான்’ என்றுதான் செல்லமாக அழைப்பதுண்டு. ஆனால், எங்களைப் பொறுத்தவரையில் அது நானாக இருந்தாலும் சரி, தம்பி தமிழாக இருந்தாலும் சரி, அண்ணன் அழகிரியாக இருந்தாலும் சரி… அவரை அண்ணன், அண்ணன் என்றுதான் அழைப்போம். காரணம், அவர் எங்களுக்கெல்லாம் மூத்த அண்ணனாக இருந்து அறிவுரைகளை, ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கிக்கொண்டு இருந்தார்கள்.

இன்னும் சொல்லவேண்டும் என்றால், நம்முடைய தலைவர் கலைஞர் மறைவிற்குப் பிறகு நம்முடையப் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியரின் மறைவிற்குப் பிறகு, நம்முடைய முரசொலி செல்வம் அவர்களின் மறைவிற்குப் பிறகு எனது மனம் உடைந்து சுக்குநூறு ஆகியிருக்கிறது. அதிலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்பதை நான் எண்ணி எண்ணித் தவித்துக்கொண்டு இருக்கிறேன். எதற்காகச் சொல்கிறேன் என்றால், பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோதும், கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை தொடங்கியபோதும் எனக்குத் துணையாக இருந்தவர். எப்படி கூட்டம் நடத்த வேண்டும். எப்படி பேச்சாளரை அழைத்து வர வேண்டும். எப்படி துண்டுப் பிரசுரம் போட வேண்டும். எப்படி சுவரொட்டி அடிக்க வேண்டும். என்பதையெல்லாம் எனக்குக் கற்றுக்கொடுத்தவர். அதற்குப் பிறகு இளைஞர் அணியாக உருவாகியபோது அப்போதும் எனக்குத் துணை நின்று என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர்.
எனக்கு பயிற்சி அளித்தவர்

ஒரு மாநாடு என்று சொன்னால், கட்சியின் பெரிய கூட்டம் என்று சொன்னால், ஏதேனும் திமுக நிகழ்ச்சி என்று சொன்னால், ஏதேனும் நிகழ்ச்சிக்குப் போகிறேன் என்றால் அதைக் கேள்விப்பட்டு முதல்நாளே என்னை அழைத்து ஒரு சீட்டை கொடுப்பார். என்ன பேசவேண்டும்; எப்படி பேசவேண்டும்; என்ன பொருளில் பேசவேண்டும்; அதை எப்படி ஏற்ற இறக்கத்தோடு பேசவேண்டும் என்று எனக்குப் பயிற்சி அளித்தவர். அப்படிப்பட்டவர் இன்றைக்கு இல்லை என்று எண்ணும்போது நான் வேதனைப்படுகிறேன்.

அவர் பெங்களூருக்குச் சென்று குடியேறியதற்குப் பிறகு ஏறக்குறைய ஒரு 25-30 ஆண்டு காலமாகியிருக்கிறது. ஆனால் மாதத்திற்கு ஒரு முறையாவது அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது சென்னைக்கு வந்துவிடுவார். திமுகவின் முக்கியமான நிகழ்ச்சி, முப்பெரும் விழா நிகழ்ச்சி, தலைவர் கலைஞர் அவர்களுடைய பிறந்தநாள், வீட்டில் ஏதேனும் நிகழ்ச்சிகள் இருந்தால் அதற்கு; இப்படி மாதத்திற்கு ஒருமுறையாவது, இரண்டு முறையாவது சென்னைக்கு வருவார். இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் தங்கிவிட்டுப் போவார். வருகின்ற செய்தி எனக்குச் சொல்லிவிடுவார். அவர் சென்னைக்கு வந்தவுடன் மாலையில் அவருடைய வீட்டிற்கு சென்றுவிடுவேன். நான் மட்டுமல்ல; அண்ணன் துரைமுருகன், இங்கே இருக்கக்கூடிய இந்நாள் – மேனாள் அமைச்சர்கள்; தி.மு.க. முன்னணியினர்; அனைவரும் போய்விடுவோம். நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம். பல்வேறு நிகழ்ச்சிகளை எங்களுக்கு எடுத்துச் சொல்வார். நாட்டில் என்ன நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொள்வார். நாங்கள் சென்னையில் இருந்து தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய செய்தியை அறிந்து கொள்வதைவிட பெங்களூரிலிருந்து அதிகமான செய்திகளை அறிந்து எங்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்வார். அந்த அளவிற்குத் துணை நின்றவர் நம்முடைய மதிப்பிற்குரிய அண்ணன் செல்வம் அவர்கள்.

அறிவுரைகளை வழங்கி வந்தார் தி.மு.க.வின் முக்கியமான நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல, தேர்தல் களத்தில் பிரசாரக் கூட்டங்கள் அல்லது அரசு நிகழ்ச்சிகள் என நான் கலந்து கொள்ளும் அத்தனை நிகழ்ச்சிகளையும் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வார்கள். அந்தக் காட்சிகளை முழுமையாகப் பார்ப்பார். அந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நான் காரில் வந்து ஏறுவேன். அவ்வாறு ஏறியவுடன் முதல் அழைப்பு அவருடைய அழைப்பாகத்தான் இருக்கும். அவர் அழைக்காவிட்டாலும் நான் அழைத்து விடுவேன். அவர் அந்த அழைப்பில், “இப்படி எல்லாம் பேசினாய், மிகவும் சிறப்பாக இருந்தது; எழுச்சியாக இருந்தது. இன்னும் இவ்வாறு மாற்றிப் பேசி இருக்கலாம்; இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசியிருக்கலாம்” என்றெல்லாம் அறிவுரை சொல்வார். ஒன்று விடாமல் பார்த்து விடுவார். தொடர்ந்து எனக்கு அறிவுரைகளை வழங்கி வந்தார். காலை, மாலை என்று இரண்டு முறையாவது எனக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகின்ற வழக்கத்தை நாங்கள் பெற்றிருந்தோம்.

தனக்கென்று எதையும் எதிர்பார்க்காமல், அவன் நல்லவனோ – கெட்டவனோ, அவன் எதிரியா – நண்பனா என்று அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஏதேனும் ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கு நல்ல காரியத்தைத்தான் அவர் தொடர்ந்து செய்திருக்கிறார். அதுதான் உண்மை.

‘முரசொலி: சில நினைவலைகள்‘

‘முரசொலி: சில நினைவலைகள்‘ பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். 100 கட்டுரைகளை அதில் எழுதி, அது புத்தக வடிவில் கூட வந்திருக்கிறது. அதைக்கூட நம்முடைய ஆசிரியர் அவர்கள் பேசுகிறபோது ‘பொக்கிஷம்‘ என்று சொன்னார்கள். இளைஞர்களுக்கெல்லாம் அது ‘பாடம்‘ என்று சொன்னார்கள். அதில், நான், அழகிரி, தமிழ் (தமிழரசு) என எங்களைப் பற்றியும் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். அதை நான் படித்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

“உடன் படிக்கும் தோழர்கள் மாலை நேரங்களில் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் காலம் செலவு செய்த நேரத்தில் கலைஞர் வீட்டுப் பிள்ளைகள் (நான், எனது தம்பி, எனது அண்ணன்) முரசொலியில் பகுதி நேரப் பணியாளர்களாக ஊழியம் செய்து கொண்டிருந்தனர். 500 ரூபாய், 1,000 ரூபாய் ஊதியத்திற்கு நாங்கள் வேலை பார்த்திருக்கிறோம். படிக்க வேண்டிய நேரத்தில்கூட பேப்பர் மடித்துக் கொண்டிருந்தனர். பொருள் ஈட்டும் நோக்கோடு முரசொலி நடத்தப்பட்டிருந்தாலும்கூட பரவாயில்லை, கலைஞர் ஈட்டிய பொருளையும் அது கரைத்துக் கொண்டிருந்தது. கலைஞரின் குடும்ப இளைஞர்கள் அனைவரும் கலைஞர் ஊட்டிய இலட்சிய வேட்கையில் தங்கள் இளமையைப் பலி கொடுத்து வந்தனர். பெரியார், அண்ணா வழியில் தான் ஏற்றுக் கொண்ட தன் லட்சியம் நிறைவேற, தன்னை மட்டுமல்ல, தன் குடும்ப உறுப்பினர்கள் பலரையும் அந்த வழியில் பயணிக்க வைத்தவர் கலைஞர்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது ஒன்று போதும் எங்களுக்கு! இதை நான் பொக்கிஷமாக எனது மனதில் பதிய வைத்துக் கொண்டிருக்கிறேன்.

திராவிட இதழியல் பயிற்சிக்களம்

எனவே, இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் நான் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன், ‘முரசொலி செல்வம் அவர்கள் பெயரால் மிக விரைவில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவது, அந்தப் பரிசை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் வழங்குவது‘ என முடிவு செய்திருக்கிறோம்.
இதைத்தொடர்ந்து இங்கு நம்முடைய ஆசிரியர் அவர்கள் வைத்த வேண்டுகோளான, முரசொலி செல்வம் அவர்களின் பெயரில் ’திராவிட இதழியல் பயிற்சிக் களம் ஒன்றை கல்லூரியாக உருவாக்க வேண்டும்’ என்ற அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்ற உறுதியைச் சொல்லி, வாழ்க செல்வம் அவர்களுடைய புகழ்… வாழ்க செல்வம் அவர்களுடைய புகழ் என்று கூறி நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Ad imageAd image
ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாற்றி விட்டாரா கேரளஆளுநர்? நிகழ்ச்சியைப் புறக்கணித்த கேரள மாநில அரசு
இலங்கை தாக்குதலை தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்
தமிழ்நாட்டில் ‘நடப்போம், நலம் பெறுவோம்’ திட்டம் 2.0 விரைவில் துவக்கம்
பிளஸ்1இல் சேர்க்க மறுக்கும் அரசுப்பள்ளிகள் அரசு தலையிட்டு தடுக்க வேண்டும்
சுங்கச்சாவடி மூலம் கொள்ளை தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி எண்ணிக்கை 96 ஆக உயர்த்த ஒன்றிய பிஜேபி அரசு முடிவு
TAGGED:மு.க.ஸ்டாலின்முரசொலி செல்வம்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?