ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு உதவிட புதிய வாட்ஸ் அப் குழு கல்வித்துறை தகவல்

Viduthalai
1 Min Read

சென்னை, அக்.21- பள்ளிக்கல்வித்துறையின் உத் தரவின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு உதவும் வகையில் 2 வாட்ஸ்-அப் குழுக்களை உரு வாக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர், கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதலமைச்சர்கள் தங்கள் நிறுவனத்தில் உள்ள 2 முதுநிலை விரிவுரையாளர் கள், விரிவுரையாளர்களை நிய மித்து 2 வாட்ஸ்-அப் குழுக் களை உருவாக்க வேண்டும் எனவும், இந்த குழுவில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆங்கில ஆசிரியர்களை இணைக்க வேண்டும் எனவும் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

குழு உருவாக்கப்பட்ட பிறகு, அந்த குழுவில் உள்ள ஆசிரியர்களோ, நிறுவன பொறுப்பாளரோ சிறு செயல்பாடுகள், பணித்தாள்கள், பாடம் கற்பித் தல் சார்ந்த விவரங்களை பதிவிட வேண்டும். இது ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் பணித்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சி என்று தெரிவித்துள்ள கல்வித் துறை, இதில் ஆர்வமில்லாத ஆசிரியர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து ஆர்வம் காட்டாத ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *