கங்கை நீர் புனிதப்படுத்துமாம்! அழைப்பானேன்… தீட்டுக் கழிப்பானேன்…

1 Min Read

பீகார் மாநிலத்தில் உள்ள துல்னா என்ற பகுதியில் உள்ள பள்ளியில் புதிதாக சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் தலைமை ஆசிரியரின் வீட்டில் நடந்த விழாஒன்றில் அவர்களது அழைப்பின் பெயரில் கலந்துகொண்டார்.

அவர் சென்ற பின்னர் தலைமை ஆசிரியரும் அவர்களது வீட்டாரும் கங்கை நீரைக் கொண்டு அவர்களது வீட்டைக் கழுவி பூஜைகள் செய்து தீட்டுக் கழித்தனர்.

இதனைத் தெரிந்துகொண்ட அந்த இளம் ஆசிரியை உடனடியாக பள்ளிக்குச் சென்று அனைத்து கரும்பலகைகளிலும் ‘சமாரஜீ’ (தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெயர்) என்று எழுதி வைத்து முடிந்தால் பள்ளியில் உள்ள அனைத்து கரும்பலகைகளையும் கங்கை நீரால் கழுவி பூஜை செய்து புனிதப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அவர் மீது புகார் அளித்துள்ளதாம் பள்ளி நிர்வாகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *