முறிந்தது இந்தியா – கனடா உறவு

viduthalai
1 Min Read

இந்தியாவில் தனி நாடு கேட்கும் காலிஸ்தான் புலிப்படை பயங்கரவாதியான ஹர்தீப்சிங் நிஜ்ஜார், கடந்த 2023ஆம் ஜூன் 18ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் ஒரு குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலையை ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த நிகழ்வில் இந்தியாவுக்கு உள்ள தொடர்பு பற்றி நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகள் தன்னிடம் உள்ளன என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை வழக்கில் இந்தியத் தூதர் சஞ்சய்குமார் வர்மாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில் இந்திய அதிகாரிகளை அவர்கள் விசாரணை செய்ய முடிவு செய்தனர்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், கனடாவுக்கான இந்திய தூதர் மற்றும் உயரதிகாரிகளை திரும்பப் பெறுவதாக 14.10.2024 அன்று அறிவித்தது. இந்திய தூதர்களின் பாதுகாப்பில் கனடாவின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *