கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்? : காங்கிரஸ் கேள்வி

1 Min Read

புதுடில்லி ஆக.1  காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று (30.7.2023) தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்ப தாவது:-

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமீபகாலமாக 35 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், அதன் பலனை பொது மக்களுக்கு கொடுக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. இதனால், ஏற்கெனவே பணவீக்க உயர்வால் அவதிப்படும் மக்கள், மேலும் சிரமப்படுகிறார்கள். பெட்ரோல், டீசல் மீதான வரி களையும் ஒன்றிய அரசு அதிகமாக வசூலிக்கிறது. இதனால், ஏழைகள், நடுத்தர மக்களின் பாக்கெட் கொள் ளையடிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விற்பனையின் பெயரில் இரக்கமின்றி கொள்ளை லாபம் ஈட்டப்படுகிறது. நடப்பு நிதி ஆண் டில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம் கிடைக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. முந் தைய ஆண்டுகளில், ரூ.33 ஆயிரம் கோடி லாபம் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மட்டு மின்றி, தனியார் எண்ணெய் நிறு வனங்களும் கொள்ளை லாபம் சம் பாதித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால், அத் தியாவசியப் பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலை யும் குறையும். ஆகவே, பெட்ரோல், டீசல் விலையை 35 சதவீதம் குறைக்க வேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த அளவுக்கு விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *