தாம்பரம், அக்.10- தாம்பரம் மாவட்டம் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் படப்பை பேருந்து நிலையம் அருகில் 1.10.2024 செவ்வாய்க்கிழமை மாலை 6மணியளவில் சிறப்பாக நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் படப்பை கழக தலைவர் செ.சந்திரசேகரன் தலைமையில் தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் வரவேற்புரையாற்றினார். தாம் பரம் மாவட்டம் தலைவர் ப.முத்தையன் தாம்பரம் கழகத் தலைவர் சீ.லட்சமிபதி, செயலாளர் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
பேச்சாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்கள் படப்பை கா.செல்வம் ம.தி மு.க., சி பார்த்த சாரதி தி.மு.க. மற்றும் தியாகு வி.சி.க. கலந்துக்கொண்டு பெரியார் அவர்களின் அருந்தொண்டு மனித நேயம் பற்றி உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கு.மீனாம்பாள், மோ.மாலதி, அனுசுயா, சி.சாந்தி, வாலாஜபாத் ரேவதி, காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் முரளி, செங்கற்பட்டு மாவட்டத் தலைவர் சுந்தரம், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் பாண்டு, பொம்மலாட்ட கலைஞர் கலைவாணன், கருணாகரன், உத்திரகுமாரன், கதிர்வேல், சோமசுந்தரம், சன் சரவணன், பெரியார் மாணாக்கன், தொண்டறம், பூவை செல்வி, தமிழர் பேரவை செங்கற்பட்டு மாவட்ட பொருளாளர் முத்து குமார், காஞ்சிமாவட்ட முக்கிய பொறுப்பாளர்கள் தனசேகரன், அரும்பாக்கம் தாமோதரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் மண்ணிவாக்கம் அருணா நன்றி கூறினார்.