கரந்தைக் கல்லூரி முதல்வரின் நன்றிக் கடிதம்

1 Min Read

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்கள் கடந்த 27.09.2024 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க விடுதலை ஏட்டின் அலுவலகம் மற்றும் அச்சுக்கூடம் இயங்குவதைப் பார்வையிட அனுமதி வழங்கியமைக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த தந்தை பெரியார் திடலில் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் உறைவிடத்தோடு உணவும் வழங்கிய தங்கள் கொடையுள்ளம் கேட்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.
பல்வேறு சமூகப்பணிகளுக்கிடையில் மாணவர்களோடு வாஞ்சையாக தாங்கள் உரையாடியதையும் அவர்களுக்கு நூல்கள் வழங்கி சிறப்பு செய்த தையும் மாணவர்களும் பேராசிரியர்களும் உருக்கமாகச் சொன்னார்கள்.

சமூகநீதிக் களத்தில் தந்தை பெரியாரோடு இணைந்தே பயணித்தவர் எங்கள் கல்லூரியின் நிறுவனர் தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள். அந்தப் பாதை மாறாமல் தங்களோடு இணைந்தே பயணித்தவர் மேனாள் செயலாளர் மறைந்த செம்மொழிவேளிர் இராமநாதன் அவர்கள்.
இந்தக் கொள்கை உறவு என்றும் நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதே எங்கள் அவா!
நன்றி அய்யா.

– இரா. இராசாமணி
முதல்வர், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சாவூர் – 613002

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *