மணிப்பூரில்: அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கியுள்ளது காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் ஆஜராக வேண்டும் : உச்சநீதிமன்றம்

2 Min Read

புதுடில்லி, ஆக.3 – மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கி யுள்ளதாக கூறிய உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையின் போது, காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள் ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் 1.8.2023 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போதுஆஜரான சொலிசிடர் ஜெனரல்துஷர் மேத்தா, ‘‘வன்முறை தொடர்பாக 6,523 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 11 முதல் தகவல் அறிக்கைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்புடையவை. பெண் கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம் பவம் தொடர்பாக ஒரு சிறார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்’’ என தெரிவித்தார். 

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், ‘‘மணிப்பூரில் மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல் லப்பட்ட விவரம்  எங்கே? இது தொடர்பாக யாரும் கைது செய் யப்பட்டுள்ளனரா? நாங்கள் 6,000  முதல் தகவல் அறிக்கைகளை பார்த்துவிட்டோம்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த துஷார் மேத்தா, ‘‘இந்த தரவுகளில் சில பிழைகள் இருக்கலாம். மே 15ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட ஜீரோ முதல் தகவல் அறிக்கைகள், ஜூன் 16-ஆம் தேதியன்று வழக்கமான முதல் தகவல் அறிக்கைகளாக மாற்றப்பட்டுவிட்டன. பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைது விவரம் என்னிடம் இல்லை’’ என்றார்.

இதனால் கோபம் அடைந்த தலைமை நீதிபதி ‘‘மே 4ஆ-ம் தேதி நடந்த சம்பவத்துக்கு, ஜூலை 26ஆ-ம் தேதியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள் ளது. ஒரு சில வழக்குகளை தவிர, மற்ற வழக்குகளில் கைது நடவ டிக்கை இல்லை. காவல்துறை விசாரணை மிக மந்தமாக நடந் துள்ளது. முதல் தகவல் அறிக்கை கள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எந்த கைதும் இல்லை. கடந்த 2 மாதங்களாக பாதிக்கப்பட்டவர் களின் வாக்குமூலங்களைக்கூட பதிவு செய்யப்படாத சூழல் இருந்துள்ளது. சட்டம், ஒழுங்கு முற்றிலும் இல்லை. மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கி யுள்ளது.

அடுத்த விசாரணை திங்கள் கிழமை நடைபெறும்போது, மணிப் பூர் காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் ஆஜராக வேண்டும். சம்பவம் நடந்த தேதிகள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட தேதிகள், சாட்சியங்கள் பெறப் பட்ட தேதிகள், கைது செய்யப் பட்ட தேதிகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *