இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டுமானால் வனங்களை காப்பது முக்கியம்! அமைச்சர் க.பொன்முடி கருத்து

viduthalai
1 Min Read

சென்னை, அக். 5- வனங்களை பாதுகாத்தால்தான் இயற்கை வளத்தை பாதுக்காக்க முடியும் என்று வனத்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியுள்ளார். வனத் துறை சார்பில் வன உயிரின வாரம் தொடக்க விழா சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நேற்று (4.10.2024) நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி பங்கேற்று, விழாவை தொடங்கிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து, வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியருக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கி கவுர வித்தார். வனத்துறையில் சிறப்பாக செயல்பட்ட பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். தொடர்ந்து வன உயிரின வார விழா குறித்த விழிப் புணர்வு கையேட்டை அவர் வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது: வனத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது. வன உயிர்களை பாதுக்காக்க வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கம். இவ்விழா ஆண்டுதோறும் காந்தியார் பிறந்த நாளான அக்.2 முதல் அக்.8ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. தேசிய வனக்கொள்கை 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வனத்திலுள்ள உயிர்களை, மரங்களை பாதுகாப்பதே இந்த கொள்கையின் நோக்கம்.

வனப்பகுதி பாதுக்காக்கப்பட் டால் தான் இயற்கை வளத்தை பாதுக்காக்க முடியும். தமிழ்நாடு முதலமைச்சர் வனத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். சாலையோரங்களில் மரங்களை வளர்க்க வேண்டுமென்று முன்ன தாகவே அறிவித்திருந்தார். அதன் படி பல இடங்களில் வனத்துறை சார்பில் மரங்களை நட்டு வருகி றோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் ப.செந்தில்குமார், வனத்துறை தலைவர் சீனிவாஸ் ரெட்டி, வண்ட லூர் உயிரியல் பூங்கா இயக்குநர் ஆஷிஸ் குமார் சிறீவஸ்தவா, மாநக ராட்சியின் அடையார் மண்டலக் குழு தலைவர் இரா.துரைராஜ், வன உயிரின காப்பாளர் மணிஷ் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *