என்ன ஆனது ரூ.40,000 கோடி ‘நமாமி கங்கே’ (புனித கங்கை திட்டம்)
கங்கை தரை தளத்தில் வந்தடையும் அரித்துவாரில் இருந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் இடம் வரை புனிதம் என்ற பெயரில் உடல்களை மிதக்கவிடும் அவலம் இன்றும் தொடர்கிறது.
சமீபத்தில் உத்தரப்பிரதேசம் – பீகார் எல்லையான பக்சரில் கங்கையில் உடல் ஒன்று உறவினர்களால் மிதக்க விடப்பட்டது,
இதற்கு காரணம் கூறும்போது, அவர் மிகவும் பாவம் செய்து விட்டதாக ஜோதிடர் கூறினாராம். அக்னியால் அவரது பாவத்தை பொசுக்க முடியாதாம்! ஆகவே, கங்கையில் விட்டால் கங்கை அவரது பாவத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு மோட்சம் கொடுக்குமாம்! ஆகையால் உடலை கங்கையில் மிதக்கவிட்டுள்ளார்களாம்.
இப்போது புரிகிறதா? கங்கை ஏன் தூய்மை ஆகவில்லை என்று. பிறகு எதற்கு ‘நமாமி கங்கே’ என்ற திட்டத்திற்கு ரூ.40,000 கோடியை கட்டி அழுகின்றனர்.