வேண்டுதலின் பெயரால் தலையில் தேங்காய் உடைப்பாம் கரூரில் தொடரும் காட்டுவிலங்காண்டித்தனம் 60 பேர் படுகாயமடைந்த அவலம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

கரூர், ஆக.4 – கரூர் மாவட்டம்  கிருஷ்ணராயபுரம்வட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோயிலில் வேண்டுதலின் பெயரால் அறியாமையில் மூழ்கியுள்ள அவலநிலை  தொடர்ந்துகொண்டிருக்கிறது. அப்பகுதியில் ஆண்டுதோறும் தலையில் தேங்காய் உடைக்கும்  இந்த மூடத்தனத்தால் பலரும் படுகாய மடைந்து வருகின்றனர்.

தலையில் தேங்காய் உடைப்ப தற்காக வேண்டிக்கொண்ட பக்தர்களின் தலையில் வெறுமனே தேங்காயை உடைப்பதன்மூலம், அப்பக்தர்களின் மண்டை ஓட்டுடன், நரம்புகளும் பாதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப் படும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

தலையில் தேங்காய் உடைப்பின் போது 60 பேர் படுகாயமடைந்தனர். அவ்விடத்தில் அய்யோ, அம்மா! என்ற கதறலுடன், பெண்கள் அலறலும் அந்த பகுதியில் பெருங்கூச்சலானது.

தேங்காய் உடைத்ததால் படுகாய மடைந்தவர்களின் தலையில் மஞ்சள் பூசப்பட்டு அவர்களை சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாமில் மண்டை உடைந்த வர்களுக்கு தையல் போடப்பட்டன.

இதில் பெண்கள் பலர் மயக்கமுற்று அங்கு படுக்க வைக்கப்பட்டனர் ஒரு சிலர் தெய்வ குத்தம் என்று கருதி எந்த  முதல் உதவி சிகிச்சையும் எடுக்காமல் சென்று விட்டனர் அங்கு வந்த பொது மக்கள் இந்த நிகழ்வைக் கண்டு வேதனையுடன் திரும்பி சென்றனர். 

அறிவியலுக்கு புறம்பான இது போன்ற மூடத்தனங்களை தடை செய்ய அரசு முன் வர வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *