ஜெர்மன் நாட்டு தோழர்கள் ஈரோடு பெரியார் – அண்ணா நினைவகத்தை பார்வையிட்டனர்

viduthalai
1 Min Read

ஜெர்மனி நாட்டு கொலோன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவ நண்பர்கள் 29.9.2024 அன்று ஈரோடு சென்று, பெரியார் – அண்ணா நினைவகத்தைப் பார்வையிட்டனர். பார்வையிட்ட மாணவர் குழுவின் தலைவர் முனைவர் ஸ்வென் வொர்ட்மென், கொலேன் பல்கலைக் கழகத்தில் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு நடைபெற உதவியாக இருந்தவர். பெரியார் திடலுடன் தொடர்பில் இருப்பவர். தமிழர் தலைவர்மீது பெரும் மதிப்பு கொண்டவர்.

கொலோன் பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் துறையில் பணியாற்றும் ஸ்வென் நன்றாக தமிழ் பேசக் கூடியவர். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை கல்விச் சுற்றுலாவாக இந்தியாவிற்கு அழைத்து வரும் வழக்கத்தை கொண்டுள்ளார். இந்த முறை முனைவர் ஸ்வென் வொர்ட்மென் அவர்களுடன் முனைவர் உல்ரிக் டுவென்ட், ஜேன் தெனீகன், பிைஷப் வென்ட்செர், லுகா, பிரைவால்ட், சீகர் உல்ப் ஆகிய மாணவ நண்பர்கள் வந்திருந்தனர். பெரியார் – அண்ணா நினைவகத்தைப் பார்வையிட்ட ஸ்வென் வொர்ட் மேன் அவர்களுக்கும் மற்றும் உடன் பயணிக்கும் நண்பர்களுக்கும் அலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *