மேட்டூர், செப்.30 தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாளில் சேலம், பூசாரி பட்டி, மேட்டூர் ஆகிய இடங்களில் உள்ள தந்தை பெரியாரின் சிலைகளுக்கு கழகத்தின் காப்பாளர் பழநி.புள்ளையண்ணன் தலைமையில், காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் க.கிருட்டிணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.