தருமபுரி, செப்.30 தருமபுரி மாவட்டம் நிம்மாங்கரை கிராமத்தில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை தலைமையில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டின் தொடக்க விழா நிகழ்வை முன்னிட்டு புதியதாக கிளைக்கழகத்தில் கழகக்கொடியினை கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஏற்றி வைத்து சிறப்பித்தார். மேனாள் மாவட்டச் செயலாளர் பெ.கோவிந்தராஜ் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் சமூக பணியைப் போற்றும் வகையில் எழுச்சிமிக்க முழக்கமிட்டார்.
கழகக் கொடியினை ஏற்றும் வரலாற்று நிகழ்வில், மாவட்டத் துணைத் தலைவர் இளைய.மாதன், ப.க. மாவட்டத் தலைவர் கதிர்.செந்தில்குமார், ப.க. மாவட்ட செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, அரூர் கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் த.மு.யாழ்திலீபன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, வாசகர் வட்ட செயலாளர் க.சின்னராஜ், காரிமங்கலம் ஒன்றியத் தலைவர் சி.இராமசாமி, நகர இளைஞரணி செயலாளர்மு.அர்ச்சுனன், நகர இளைஞரணி துணைச் செயலாளர் கண்.இராமச்சந்திரன், நகரத் தலைவர் கரு.பாலன், தொழிலாளர் மாவட்ட தலைவர் மு.சிசுபாலன், தொழிலாளரணி மாவட்ட செயலாளர் பெ.மாணிக்கம் ஆகியோர் இந்நிகழ்விற்கு வருகைத் தந்த தோழர்களுக்கு தேநீர் விருந்து வழங்கினர்.
பாப்பாரப்பட்டி நகரத் தலைவர் மா.சுந்தரம், ஆசிரியரணி நடராஜன், பாப்பாரப்பட்டி மாணிக்கம், காமலாபுரம் சி.பிரகாசம், பழைய தருமபுரி தம்பிதுரை, சிவலிங்கம், இராம்ஜி, ச.அகரன் மத்தூர் ஒன்றிய மருத்துவரணி, சரவணன், சரவணன், நந்தகுமார் ஆகிய கழகத் தோழர்களோடு ஊர் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்படைய செய்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் அடுத்து தொடர்ச்சியாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழாவை வரவேற்று சிறப்பிக்கும் வகையில், டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளில் பழைய தருமபுரியில் மேனாள் மாவட்டச் செயலாளர் பெ.கோவிந்தராஜ் தலைமையில் கழகக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெறும். மேலும் மாவட்ட முழுவதும் உள்ள கிளைகளில் கழகக்கொடி ஏற்றும் நிகழ்வை முன்னெடுக்க வேண்டும் என்பதனைக் குறிப்பிட்டு ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் கழகக்கொடி ஏற்றி சிறப்புரை நிகழ்த்தி விழாவை நிறைவு செய்தார்.
நிறைவாக அனைவருக்கும் மு.அர்ச்சுனன் நகர இளைஞரணி செயலாளர் நன்றி கூறினார்.