மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் வாழ்த்து செய்தி

Viduthalai
1 Min Read

 தமிழர் தலைவர் டாக்டர் கி வீரமணி அவர்களுக்கு “தகைசால் தமிழர்” எனும் உயரிய விருது முதல் முதலாக தமிழ்நாட்டு அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப் படுவது கண்டு பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கின்றோம். பெரியார் அவர்களின் சமூக நீதி கொள்கை களுக்கும் சமுதாய சீர்திருத்த சிந்தனைகளுக்கும் கிடைத்த பெரும் வெற்றியாக இந்த விருது அமைந்துள்ளது. திராவிடர் கழகத்தை மாபெரும் சக்தியாக நிலை நிறுத்தி உலகளாவிய நிலையில் பெரிதும் மதிக்கத்தக்க ஒரு இயக்கமாக உருவாக்குவதில் ஆசிரியர் அளப்பரிய பங்காற்றியுள்ளார்.

என்றென்றும் பெரியாரின் மாணவர் என பறைசாற்றும் ஆசிரியரின் அய்யாவின் மணிமகுடத்தில் இந்த விருது ஒரு வைரமாக ஒளிவீசும் என மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரும் சபா தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின் தலைவருமான மு. கோவிந்தசாமி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *