மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் வாழ்த்து செய்தி

1 Min Read

 தமிழர் தலைவர் டாக்டர் கி வீரமணி அவர்களுக்கு “தகைசால் தமிழர்” எனும் உயரிய விருது முதல் முதலாக தமிழ்நாட்டு அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப் படுவது கண்டு பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கின்றோம். பெரியார் அவர்களின் சமூக நீதி கொள்கை களுக்கும் சமுதாய சீர்திருத்த சிந்தனைகளுக்கும் கிடைத்த பெரும் வெற்றியாக இந்த விருது அமைந்துள்ளது. திராவிடர் கழகத்தை மாபெரும் சக்தியாக நிலை நிறுத்தி உலகளாவிய நிலையில் பெரிதும் மதிக்கத்தக்க ஒரு இயக்கமாக உருவாக்குவதில் ஆசிரியர் அளப்பரிய பங்காற்றியுள்ளார்.

என்றென்றும் பெரியாரின் மாணவர் என பறைசாற்றும் ஆசிரியரின் அய்யாவின் மணிமகுடத்தில் இந்த விருது ஒரு வைரமாக ஒளிவீசும் என மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரும் சபா தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின் தலைவருமான மு. கோவிந்தசாமி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *