கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

27.9.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மைக்கு பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை; அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறும் அரியானா மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் – ராகுல் நம்பிக்கை.
* தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக சந்திப்பேன்; பதவி விலக மாட்டேன் – சித்தராமையா உறுதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக 11, கூட்டணி கட்சிகள் 4, எதிர்க்கட்சி 9 தலைமையில் 24 நாடாளுமன்ற நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் தொடர்பான குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைவராகவும், தொழில்துறை குழுவிற்கு நாடாளு மன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தலைவராகவும் நியமனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குஜராத் அரசுக்கு எதிராக முன்வைத்த விமர்சனத்தை நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.
தி டெலிகிராப்:
* வேலைவாய்ப்பு-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்கள், ஊழியர்களை நிரந்தரமாக்காமல், தற்காலிக பணியாளர்களாகவே உருவாக்கிடும், ஒன்றிய அரசுக்கு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
டைம்ஸ் ஆப் இந்தியா:
* புனே மெட்ரோ திறப்பு விழா பிரதமர் வருகைக்காக இதுவரை அய்ந்து முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது, என்சிபி (எஸ்பி) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே கிண்டல்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *