பிஜேபி ஆட்சியின் லட்சணம் ஓய்வூதியம் பெற இரண்டு கிலோமீட்டர் தூரம் ஊர்ந்து சென்ற மூதாட்டி

Viduthalai
1 Min Read

புவனேஸ்வர், செப்.27 ஒடிசாவில் நடக்க முடியாத மூதாட்டி ஒருவர் ஓய்வூதியம் பெற உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு 2 கி.மீ. தூரம் ஊர்ந்து சென்ற காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து இனி அந்தப் பெண்மணிக்கு வீட்டுக்கே சென்று ஓய்வூ தியம் வழங்கப்படும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டம், ரைசுவான் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி பத்தூரி தெகூரி (65). சில ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இதையடுத்து மாநில அரசின் மதுபானி ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளியாக பத்தூரி சேர்க்கப்பட்டார். மாதந்தோறும் உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகம் வந்து ஓய்வூதியத்தை பெற்றுச்செல்லுமாறு அவர் கேட்டுக்கொள் ளப்பட்டார்.
இந்நிலையில் நடக்கமுடி யாத நிலையில் இருக்கும் பத்தூரி கடந்த சில நாட் களுக்கு முன் ஓய்வூதியம் பெறு வதற்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்துக்கு ஊர்ந்து சென்றார். அவர் ஊர்ந்து செல்லும் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. ‘‘ஓய்வூதியம் வழங்க யாரும்வீட்டுக்கு வராததால், வேறு வழியின்றி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ஊர்ந்து சென்றேன்” என்று அந்த மூதாட்டி தெரிவித்தார்.

சமூக நலத்திட்ட உதவிகள் வீட்டுக்கே வந்துசேரும் என உறுதிஅளிக்கப்படும்போதிலும் அதைப் பெறுவதற்கு மூதாட்டி ஒருவர் ஊர்ந்து செல்லவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்தன.
இதையடுத்து, ‘‘அந்தப் பெண்மணிக்கு ஓய்வூதியம் இனிமேல் அவரது வீட்டுக்கே சென்று வழங்கப்படும். அவருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்படும்’’ என அதி காரிகள் அறிவித்துள்ளனர். ரைசுவான் பஞ்சாயத்து தலைவர் பகுன் சாம்பியா கூறும் போது, “அந்தப் பெண்மணிக்கு ஓய்வூதியம் மற்றும் உணவுப் பங்கீட்டுப் பொருட்களை வீட்டுக்கு சென்று வழங்கும்படி பஞ் சாயத்து அலுவலர் மற்றும் வினியோக உதவியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளேன்’’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *