சென்னை, செப்.27- பக்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச்சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை வழங்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு மீனவர்கள் கைது இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டி ருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள், ஈரான் நாட்டிற்கு சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அங்கு எல்லை தாண்டிச் சென்ற தாகக் கூறி, பக்ரைன் கடலோ ரக் காவல் படையினர் அவர் களை கடந்த 11ஆம் தேதியன்று கைது செய்துவிட்டனர். அந்த படகு, ஈரான் நாட்டைச் சேர்ந்தது.
சட்ட உதவி: பக்ரைன் கடலோரக் காவல் படையினரின் இந்த கைது நடவடிக்கையின் காரணமாக, மீனவர்களின் வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள அவர்களது குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை உடனடியாக மேற்கொள்ள நீங்கள் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.