கடவுளின் சக்தி இவ்வளவுதானா? ஆன்மிக யாத்திரை சென்றுவந்தவர்கள் லாரி மீது கார் மோதி 7 பேர் உயிரிழப்பு

Viduthalai
1 Min Read

அகமதாபாத், செப்.26 குஜராத்தின் சபா்கந்தா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தார்.
சபா்கந்தா மாவட்டத்தின் ஹிமத்நகா் பகுதியில் நேற்று (25.9.2024) அதிகாலை இந்நிகழ்வு நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானின் உதய்பூா் மற்றும் குஜராத்தின் அகமதாபாத்தை இணைக்கும் நெடுஞ்சாலையில், 8 பேருடன் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த 7 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் படுகாயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்தில் கார் முற்றிலுமாக சிதைந்தது; தீவிர முயற்சிக்குப் பின்னரே உடல்கள் அதிலிருந்து மீட்கப்பட்டன என்று காவல்துறையினா் தெரிவித்தனா். காரில் பயணம் செய்தவர்கள் ஆன்மிக யாத்திரைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டு இருந்தனர் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *