கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

24.9.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மக்களை பிளவுபடுத்தும் சக்தி பாஜக – ராகுல் குற்றச்சாட்டு.
* இந்தியா கூட்டணி 56 இஞ்ச் மோடியை மனதளவில் வீழ்த்தியுள்ளதாக, ராகுல் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்.
* ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு’ என்று சொல்லக் கூட பயப்படும் பிரதமர் மோடி, ‘பகுஜன்கள்’ தங்கள் உரிமைகளை பெறுவதை விரும்பவில்லை – ராகுல் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயித் மத்திய பிரதேசத்தில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார், வேளாண் பொருட்களுக்கு குறைந்த ஆதார விலை கேட்டு போராட்டம்.
* முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, பிறகு உள்ளாட்சி தேர்தல்: தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் திட்டவட்டம்.
தி டெலிகிராப்:
* குளோபல் அய்அய்எம் மேனாள் மாணவர் நெட்வொர்க் மற்றும் அறிஞர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 2025 முதல் பிஎச்.டி. சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அய்அய்எம் அகமதா பாத் முடிவு செய்துள்ளது.
*சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (ஓபிசி) வேட்பாளர்கள் அரசுப் பணியில் சேருவதில் உள்ள சிரமங்களை தீர்க்க பிரதமர் நரேந்திர மோடி தலையிடக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *