பயிற்சி மய்ய மாணவா்கள் உயிரிழந்த விவகாரம்: 4 வாரங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Viduthalai
1 Min Read

புதுடில்லி, செப்.23 டில்லியில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தனியார் பயிற்சி மய்யத்தில் அய்ஏஎஸ் தோ்வுக்கு தயாராகி வந்த மூன்று போ் உயிரிழந்தனா்.
இந்த நிகழ்வு குறித்து விசாரிக்க ஒன்றிய அரசு அமைத்த உயா்நிலைக்குழு அதன் அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 20.9.2024 அன்று உத்தரவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நடைபெறுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடா்பான அறிக்கையை அரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் டில்லி அரசுகள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் தலைமையிலான அமா்வு உத்தரவிட்டது.

இதுதொடா்பாக நீதிபதிகள் மேலும் கூறியதாவது:
ராஜிந்தா் நகரில் நடைபெற்ற நிகழ்வுபோல் டில்லியில் மீண்டும் ஒரு நிகழ்வு நடைபெறாமல் தடுக்க வலுலான கொள்கைகளை வகுக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் இந்திய அளவில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம். எனவே, இந்த விவகாரத்தை விசாரித்து வரும் ஒன்றிய அரசின் உயா்நிலைக்குழு இந்தச் நிகழ்வுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட இடைக்கால நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனா். டில்லியில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி பெய்த கனமழையால் பழைய ராஜிந்தா் நகரில் உள்ள ‘ராவ்ஸ் அய்ஏஎஸ் ஸ்டடி சா்கிள்’ பயிற்சி மய்யத்தின் அடித்தளத்தில் வெள்ள நீா் புகுந்தது. இதில் 3 மாணவா்கள் உயிரிழந்தனா். இந்நிகழ்வை கண்டித்தும், குடிமைப் பணி தோ்வுக்கு தயாராகி வரும் மாணவா்களுக்கு தேவையான வசதிகளை உறுதி செய்ய வலியுறுத்தியும், டில்லி ஜந்தா் மந்தரில் தோ்வா்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *