மகளிர் உதவித்தொகை பயனாளிகள் அஞ்சலகங்களிலும் கணக்கு தொடங்கலாம்

1 Min Read

தமிழ்நாடு

சென்னை, ஆக. 5- மகளிர் உதவித்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கை அஞ்சலகங்களிலும் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் மேஜர் மூ.மனோஜ் வெளியிட்ட அறிக்கை: 

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளி கள், நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டம், பிரத மரின் கிசான் மற்றும் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட திட் டங்களின் பயனாளிக ளுக்கு ஆதார் இணைப் புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம்.

இதற்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் கணக்கு தொடங் கலாம். அவ்வாறு தொடங் கப்படும் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை எதுவும் கிடையாது. அஞ்சல்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கைப்பேசி-பயோமெட்ரிக் சாதனத் தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் எண், கைப்பேசி எண் ஆகிய வற்றைக் கொண்டு விரல் ரேகை மூலம் சில நிமி டங்களில் கணக்கைத் தொடங்கலாம்.

மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத்தொகையை அருகில் உள்ள அஞ்சல கங்களில் அஞ்சல்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *