குழந்தைகளுக்கு கழுதை, மாட்டுப் பால், தேன் கொடுக்கக் கூடாது

1 Min Read

வேலூர், ஆக. 5– வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் குழந்தைகள் நல பிரிவு சார்பில் “உலக தாய்ப்பால் வார தின விழா” ஒரு வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தாய்ப்பால் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாப்பாத்தி தலைமை தாங்கினார்.  

சென்னை குழந்தைகள் நல மருத்து வக் கல்லூரி பேராசிரியர் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நிபுணர் அனிதா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதா வது:- குழந்தை பிறந்த ஒரு மணி நேரத் தில் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்க வேண்டும். கட்டாயம் 6 மாதத்திற்கு தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.  

மாட்டுப் பால், பால் பவுடர், தேன், சர்க்கரை தண்ணீர், கழுதைப் பால் போன் றவை கொடுக்க கூடாது. தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது ‘கங்காரு’ அரவணைப்பு போன்று பால் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை பால் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கி யமாக வளரும். இவ்வாறு அவர் கூறினார்.  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *