ஜம்மு-காஷ்மீரில் போட்டியிடவே ஆட்கள் இல்லை! இதுதான் பா.ஜ.க.வின் பரிதாப நிலை!

Viduthalai
1 Min Read

ஜம்மு, செப்.15- காஷ்மீருக்கு இருந்த (370ஆவது சட்டப்பிரிவு) சிறப்புத் தகுதியை நீக்கிவிட்டு மாநில தகுதியையும் நீக்கி, அம்மாநிலத்தை 3 யூனியன் பிரதேசங்களாக மாற்றிய ஒன்றிய பாஜக அரசு தற்பொழுது 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் போட்டியிடவே ஆட்கள் இல்லாத நிலையில் திண்டாடுகின்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 18.9.2024, 25.9.2024 மற்றும் 1.10.2024 என 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில், ஜம்மு-காஷ் மீரின் முக்கிய பகுதியான காஷ் மீர் பள்ளத்தாக்கில் குறைந்த வேட்பாளர் களை நிறுத்தி பாஜக தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது.

பள்ளத்தாக்கில் மொத்தம் 47 தொகுதிகள் உள்ள நிலையில், 28 இடங்களை பாஜக தவிர்த்து வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே கட்சி போட்டி யிடுவதை பாஜக தேசிய தலைமை உறுதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. தேசிய தலைமையின் இந்த முடிவு கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியிட ஆட்கள் இல்லை

370ஆவது சட்டப்பிரிவு ரத்து காரணமாக ஜம்மு-காஷ்மீரில் பாஜக மீது கடும் அதிருப்தி அலை உள்ளது. கடந்த காலங்களில் பள்ளத்தாக்கு பகுதியில் பாஜகவிற்கு எதிராக மாபெரும் பேரணிகள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக பள்ளத்தாக்கில் பாஜகவுக்கு செல்வாக்கு எதுவும் கிடையாது. அதே போல போட்டியிட பாஜகவிற்கு ஆட்களும் கிடைக்கவில்லை. இதனால் தான் வெறும் 19 வேட்பாளர்களுடன் பாஜக பள்ளத்தாக்கில் மூழ்கிவிட்டது.

வேட்பாளர் அறிவிப்பு மூலம் தேர்தலுக்கு முன்பே ஜம்மு-காஷ்மீரில் பாஜக தோல்வியை ஒப்புக் கொள்வது போன்ற நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *