பெரியார் விடுக்கும் வினா! (1432)

0 Min Read

ஜனநாயகப் பேயும், எலெக்சன் நோயும், பதவி வருவாய்களும் – இவை ஒழியுமா என்பது ஒருபுறமிருக்க, நம்மில் பெரும் பணக்கார செல்வவான்களும், உயர்தர உயர்நிலைக் கல்வி கற்றவர்கள் என்னும் கல்விமான்களும், பெரும் பதவி என்பவைகளில் இருக்கும் பதவியாளர்களும் பலர் இருக்கிறார்கள். இருந்தும் தமிழர்களின் இழிநிலையை எதிர்த்துப் போராட முன் வருகின்றார்களா? பார்ப்பனர்களுக்குப் பயந்து அவர்களுக்கு ஆதரவும், அடிமைத் தன்மையும் அளிப்பவர்களாகவே இருந்து வரலாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *