அரியானாவில் பா.ஜ.க.-வுக்கு தொடர்ந்து பின்னடைவு! சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் மாநில துணைத் தலைவர் பதவி விலகல்

2 Min Read

சண்டிகர், செப்.12- அரியானாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வேலை செய்து வருகிறது. அதேவேளையில் ஆட்சியை பாஜக-விடம் இருந்து கைப்பற்ற காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

இந்த முறை பாஜக ஆட்சியை தக்கவைக்க கடுமையாகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னணித் தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி வருவது அந்தக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இரண்டு அமைச் சர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேனாள் அமைச்சர் கட்சி யில் இருந்து விலகிய நிலையில், தற்போது அரியானா மாநில பாஜக-வின் துணைத் தலைவர் சந்தோஷ் யாதவ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

கட்சிக்கு விசுவாசமாக உழைத்த தொண்டர்களை விட, உழைக் காதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என சந்தோஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தனது பதவி விலகல் கடிதத்தில் “கட்சிக்கான என்னுடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. எந்தவொரு சூழ்நிலையிலும் கட்சிகள் கொள்கையை பின்பற்றியுள்ளேன். ஆனால், அடிமட்டத்தில் போராடி, பக்தியுடன் உழைத்து, கட்சியை வலுப்படுத்துவதில் அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர்களை கட்சி புறக்கணித்து வருகிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் சொல்ல வேண்டும்.

இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க தொழிலாளர்கள் ஓரங்கட்டப்பட்டு கட்சிக்காகவும் தங்கள் சட்டமன்றத் தொகுதி மக்களுக்காகவும் உழைக் காத நபர்களுக்கே முன்னுரிமை அளிக் கப்படுகிறது.

இந்த நிலை மிகவும் கெட்ட வாய்ப்பானதாகும். இது கட்சியினர் மத்தியில் ஏமாற்றத் தையும் அதிருப்தியையும் பரப்பி வருகிறது” சந்தோஷ் யாதவ் தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.

இதற்கிடையே இவருக்கு போட்டி யிட வாய்ப்பு கிடைக்காததால் தனது பதவியிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. சந்தோஷ் யாதவ் அட்டெலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால், ஒன்றிய அமைச்சர் ராவ் இந்தரஜித் சிங்கின் மகள் ஆர்த்தி சிங் ராவிற்கு கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 7.9.2024 அன்று மேனாள் அமைச்சர் பச்சான் சிங் ஆர்யா பாஜகவில் இருந்து வெளியேறி னார். சிஃபிடான் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியில் இருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்த குமார் கவுதமிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் பதவியிலிருந்து அவர் விலகினார்..
தற்போது சந்தோஷ் யாதவ் பதவியிலிருந்து விலகியுள்ளார். அடுத்தடுத்து தலைவர்களின் விலகலால் இது பாஜகவுக்கு பின் னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக இரண்டு அமைச்சர்கள், ஒரு சட்டமன்ற உறுப்பினர் பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *