திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல்

1 Min Read

திருச்சி, செப்.11- தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடுவது குறித்து திருவரங்கத்தில் 10/9/2024 மாலை 7 மணிக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ். தலைமையில் மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் முன்னிலையில் சிறப்பான முறையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் பக்கத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் கொடியேற்றுவதும் மற்றும் திருவரங்கத்தை சுற்றி உள்ள 32 கொடிக்கம்பங்களில் கொடியேற்றி சிறப்பிக்கவும் அன்று மதியம் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வழக்குரைஞர்
எஸ்.ஹரிஹரன் எப்பொழுதும் போல் புலால் உணவு வழங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்டோர் சா.கண்ணன், நகர தலைவர்
இரா.முருகன், நகர செயலாளர் பி.தேவா, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.மகாமணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் த.அண்ணாதுரை, திருவரங்க நகர துணைத் தலைவர் தா.ஜெயராஜன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஆ.பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *