அமெரிக்கா சென்றாலும் முதலமைச்சருக்கு தமிழ்நாட்டின் மீதே கண்

2 Min Read

தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
2026 சட்டப்பேரவை தேர்தல் வியூகம் குறித்து விவாதித்தார்

சென்னை, செப். 9- தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 2026 சட்டப் பேரவை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தார்.
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தார்.
இந்த குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச் சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய திமுக தலைமைக்கு பரிந்துரைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், மாவட்டங்களை மேலும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு குழு இதுவரை திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, வழக்குரைஞர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணியுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. அப்போது அணியினர் தெரிவித்த கருத்துகளை கேட்டறிந்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் இக் குழு வழங்கியது.

இந்நிலையில் முதலீடுகளை ஈர்ப் பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். வெளிநாடு சென்றாலும் ஆட்சியையும், கட்சி பணியையும் அங்கிருந்து கவனிப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதன்படி வெளிநாட்டில் இருந்தபடி ஆட்சியையும், கட்சி பணியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் கவனித்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (8.9.2024) சான் பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். 2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *